ரெயில் நிலையங்களில் முக கவசம் கட்டாயம்.. அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

ரெயில் பயணிகள் ரெயில் நிலையங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல ரெயில்வேகளுக்கும் மத்திய ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரெயில் நிலையங்களில் பயணிகள் முக கவசம் அணியாமல் இருந்தால்  ரூ.500 அபராதம் விதிக்கப்படும். எனவே ரெயில் பயணிகள் ரெயில் நிலையங்களில் முக கவசம் தவறாமல் அணிந்து செல்ல வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Translate »
error: Content is protected !!