அதிகரிக்கும் கொரோனா தொற்று… அரண்டு போயிருக்கும் அமெரிக்கா!

ஒரே நாளில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டுள்ளதால், செய்வது அறியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னமும் மீள முடியாமல் போராடி வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதிப்புகளில், அமெரிக்க தான் முதல்இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இதுவரை 1 கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 396 என்று, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இச்சூழலில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது. அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு, 1 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்து வரும் கொரொனாவை கட்டுப்படுத்த வழியறியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.

Translate »
error: Content is protected !!