அரியானாவில் காதல் ஜோடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

அரியானாவில் திருமணம் செய்து கொள்ள சென்ற போது பட்டப்பகலில் காதல் ஜோடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

அரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டம் கன்ஹெலி கிராமத்தைச் சேர்ந்தவர், பூஜா ( வயது 23) பக்கேட்டா ரோஹித் (23)  இருவரும்  காதலித்து வந்துள்ளனர். இவர்கள் திருமணம் செய்வது குறித்து முடிவெடுத்த வேளையில் பெண் வீட்டாருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த ஜோடியினர் நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

 இதற்காக புதன்கிழமை அன்று நீதிமன்றத்திற்கு வரும் வழியில் மகர்ஷி தயானந்த் பல்கலைக்கழகத்திற்கு அருகே வந்த காதல் ஜோடியை வழிமறித்த சிலர் துப்பாக்கியால் சரமாறியாக சுட்டு உள்ளனர்  இதில் படுகாயமடைந்த இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான இளைஞருடன் வந்த அவரது சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பூஜாவின் மாமா குல்தீப் மற்றும் உறவினர் விகாஸ் ஆகியோரை  போலீசார் கைது செய்துள்ளனர்.

ரோஹித்தின் தாயார் சந்தோஷ் கூறும் போது  பூஜா மற்றும் ரோஹித் ஒரு ஸ்விஃப்ட் காரில் சென்று கொண்டு இருந்தனர். ​​பெண்ணின்  தந்தை , தாய் மற்றும் சகோதரர் மற்றும் கூட்டாளிகளுடன் காரை வழிமறித்து  என் மகன் ரோஹித் மற்றும் பூஜா ஆகியோரை சுட்டுக் கொன்றார்.   அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களிலும் இந்த  காட்சி பதிவாகி உள்ளது என கூறினார்.

 

Translate »
error: Content is protected !!