ஆரணி அருகே தனியார் வர்த்தக நிறுவனத்தின் குடோனில் திருட்டு; 6 பேர் கைது

ஊத்துக்கோட்டை,

ஆரணி அருகே துரைநல்லூர் ஊராட்சியில் தனியார் வர்த்தக நிறுவனத்தின் குடோனில் கடந்த அக்டோபர் மாதம் பொருட்களின் இருப்புகளை மேனேஜர் முத்து ஆய்வு செய்தார். அப்போது, 12 செல்போன்கள், 6 கைக்கடிகாரம், 37 ப்ளுடூத் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.

அதன் மதிப்பு ₹5 லட்சம். இதுகுறித்து ஆரணி போலீசில் முத்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து, கொசவன்பேட்டையை சேர்ந்த காவ்யா(19), சோழவரத்தை சேர்ந்த தினேஷ்(18), கவுதம்(21), பவித்ரன்(22), கிஷோர்(18), பொன்னேரி புன்னம்மாஞ்சேரியை சேர்ந்த சூர்யா(19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் திருடியதாக ஒப்புக்கொண்டதால், அவர்களிடம் இருந்து 10 செல்போன், 6 வாட்ச், 2 ப்ளுடூத் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 6 பேரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Translate »
error: Content is protected !!