இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37,154 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடி 8 லட்சம் 76 ஆயிரம் 376 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 39,649 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 00 லட்சம் 14 ஆயிரம் 713 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 4 லட்சம் 50 ஆயிரம் 899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 724 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு, இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 8 ஆயிரம் 764 ஆக உயர்ந்துள்ளதுஇந்தியாவில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 37 கோடி 73 லட்சத்து 52 ஆயிரம் 501 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

 

Translate »
error: Content is protected !!