இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடி 9 லட்சம் 07 ஆயிரம் 282 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 49,007 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 00 லட்சம் 63 ஆயிரம் 720 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 4 லட்சம் 31 ஆயிரம் 315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 2,020 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு, இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 10 ஆயிரம் 784 ஆக உயர்ந்துள்ளதுஇந்தியாவில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 38 கோடி 14 லட்சத்து 67 ஆயிரம் 604 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!