இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரம் 511 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 40,013 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 12 லட்சத்து 20 ஆயிரத்து 981 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,86,351 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 497 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 29 ஆயிரம் 179 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 51 கோடி 90 லட்சத்து 80 ஆயிரத்து 524 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!