இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 22 லட்சத்து 85 ஆயிரம் 857 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 37,169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 14 லட்சத்து 85 ஆயிரத்து 923 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,67,415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 440 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 32 ஆயிரம் 519 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் இதுவரை 56,06,52,030 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!