இபிஎஸ் ஆட்சி பற்றி வாய் திறக்காத ஓபிஎஸ்… அதிமுகவில் மீண்டும் சலசலப்பு!

திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல். கே.குப்பன், மாதவரம் தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் திருவொற்றியூரில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களைப் பற்றியும், திமுகவை எதிர்த்தும் மட்டுமே பேசினார். எடப்பாடி ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை பற்றியோ அவரது ஆட்சியில் மக்கள் பெற்ற பயன்கள் பற்றியோ பேசவில்லை.

கடந்த சில தினங்களாக எடப்பாடியை முன்னிறுத்தி ஓபிஎஸ் பேசுவதில்லை என்று அதிமுக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திருவொற்றியூரிலும் இதே பாணியை அவர் கடைபிடித்ததால் எடப்பாடி மீண்டும் பதவிக்கு வருவது ஓபிஎஸ்க்கு பிடிக்கவில்லையோ என்று அதிமுகவினர் முணுமுணுத்தனர். இது, சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Translate »
error: Content is protected !!