ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நோய் தொற்று பாதிக்கப்பட்ட தெரு கட்டைகள் போட்டு அடைப்பு.

கொரோனா நோய் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சியின் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வசிக்கும் நபர்.. பெரியகுளம் தென்கரை பகுதியில் ப்ரொவ்சிங் செண்டர் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் அவர் கொரோனா பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தில் உள்ள மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மூவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என 4 நபர்களுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கீழ வடகரை ஊராட்சி நிர்வாகம் நோய் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் குடியிருக்கும் தெரு முழுவதும் கிருமி நாசினி தெளித்தும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து கட்டைகள் போட்டு அடைத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!