ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் உடன்பிறந்த சகோதரியின் கணவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி பகுதியிலுள்ள சேடபட்டியில் முன்னாள் துணை முதலமைச்சர் .பன்னீர் செல்வத்தின் மனைவியின் தங்கை சுப்புலட்சுமியின் கணவர் அன்புக்கரசன் (60) அவருடைய தென்னந்தோப்பில் வழக்கம்போல  தோட்டத்திற்கு வந்த அன்புக்கரசன் கிணற்றின் ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்த முயற்சி செய்தபோது,

80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்ததாகவும் அதை பார்த்த வேலையாட்கள் உடனடியாக காப்பாற்ற முயற்சி செய்தும் அவர் நீரில் மூழ்கியதால் உடனடியாக பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றில் நீர் அதிகமாக இருந்ததால் இரண்டு மின் மோட்டார்களை கொண்டு கிணற்று நீரை வெளியேற்றி இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்புஅன்புக்கரசனின் உடலை மீட்டனர்மேலும் இச்சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!