கன்னியாகுமரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு

கன்னியாகுமரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் செல்லும் முதலமைச்சர்,

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செல்கிறார்.

அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர், அதன்பின்னர் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!