களைகட்டும் கும்பக்கரை அருவி…!

கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் கும்பக்கரை அருவியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள். நீர் வரத்து மிகவும் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து செல்கின்றனர்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மழை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் நீர் வரத்தும் சற்று  குறைந்து காணப்படுகின்றது.

தற்பொழுது கோடை வெப்பம் அதிகரிக்க துவங்கி உள்ளதால் விடுமுறை நாட்களில் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று விடுமுறை என்பதால் கோடை வெப்பத்தை தனிக்க சுற்றுலா பயணிகள் காலை முதல் அதிக அளவில் வந்து குவிந்துள்ளனர்.

இந்நிலையில் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சற்று குறைந்து காணப்படுகின்றது. இதனால் வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் காத்திருந்து குழித்து செல்கின்றனர். மேலும் அருவியில் போதிய நீர் வரத்து இல்லாதால் வரும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு மேல் தேங்கியுள்ள நீரில் குழித்து செல்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கும்பக்கரை அருவிக்கும் வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!