கேரளாவில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

கேரளாவில் ஜூன் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 15.22 சதவிகிதமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

ஆகவே இந்த கட்டுப்பாடு நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதல் வைத்திருக்கவேண்டும் என கேரளா அரசு தெரிவித்துள்ளது. கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்படும். தொழிற்சாலைகள் 50 தொழிலாளர்களுடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜூன் 10 முதல் அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!