கொரட்டூரில் சிக்கிய 10 கிலோ கஞ்சா: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த நபர் பிடிபட்டார்

சென்னை கொரட்டூரில் போலீசாரின் அதிரடி சோதனையில் 10 கிலோ கஞ்சா சிக்கியது. அதனை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த நபரை கைது செய்தனர்.

சென்னை, பாடி, பாண்டுரங்கபுரம், அம்மா உணவகம் அருகில் ரகசியமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தது. அதன்பேரில் பாடி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஒயிட் (எ) மகேஷ்குமார் என்பவரை கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் சுமார் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மகேஷ் குமார் ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும் இவர் மீது ஏற்கனவே கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!