கொரோனோ புதிய உச்சம்… பெரியகுளத்தில் வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம்

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் வியாபாரிகள் , வர்த்தகர்கள், சங்க நிர்வாகிகளுடன் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம்

தமிழகம் முழுவதும் இரண்டாவது கொரானா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டம் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் நகர வியாபாரிகள் சங்கம், வர்த்தக சங்கம் மற்றும் காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கொரோனோ வைரஸ் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது துணை கண்காணிப்பாளர் கூறுகையில் கடைவீதி, காந்தி சிலை, மார்க்கெட்வீதி, பெருமாள் கோவில், பேரூந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் வியாபாரிகள் வர்த்தகர்கள் தங்கள் கடை முன்பு வாகனங்கள் நிறுத்த கூடாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளது. 

மீறி கடை முன்பு வாகனங்கள் நிறுத்தினாள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கடையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறினார்.

Translate »
error: Content is protected !!