சின்னமனூர் பகுதிகளில் விற்பனைக்காக கடத்திச் சென்ற 113 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்திக் கொண்டு வரப்பட்ட 113 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சின்னமனூர் பகுதிகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின்பேரில், சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா, சார்பு ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சின்னமனூரில் இருந்து கன்னிசேர்வைபட்டிக்கு சென்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர், அதில் 113  மதுபானபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் மதுபான பாட்டில்களை கடத்தி வந்தவர் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்த செல்லம் மகன் சேகர் என்பதும், இவர் சின்னமனூரில் உள்ள தனியார் பாரில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து, மதுபானங்களை கடத்தி வந்த சேகரை கைது செய்து அவரிடமிருந்து 113 மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Translate »
error: Content is protected !!