சிமெண்ட், கம்பிகளின் விலையேற்றத்தை கண்டித்து….அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிமெண்ட், கம்பிகளின் விலையேற்றத்தை கண்டித்தும், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்தியா முழுவதும் சிமெண்ட் மற்றும் கம்பிகளின் விலை 30சதவீதம் முதல் 40சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் ஏழைகளின் வீடு கட்டும் கனவு கனவாகவே உள்ளது என்றும், கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே செயற்கையாக சிமெண்ட் மற்றும் கம்பி விலையை ஏற்றுவதை கண்டித்தும், விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள கட்டுமான தொழிலை பாதுகாக்க அரசு கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை திரும்பபெற வேண்டும் மேலும் தொடர் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

சிமெண்ட் மற்றும் இரும்பு விலையை நிர்ணயிக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்டுனர்கள், கட்டுநர் வல்லுனர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் என 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், செயற்கையான விலை ஏற்றத்தை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர்.

Translate »
error: Content is protected !!