சென்னையில் நேற்று லாக்டவுனை மீறிய 1,453 வாகனங்கள் பறிமுதல்… 2,308 வழக்குகள் பதிவு

சென்னை நகரில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு காலத்தில் நேற்று மாலை 6 மணி வரையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 2,308 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,453 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாத 1,288 நபர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத 147 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு,   தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 காலை வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையாக, 24.5.2021 காலை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், 24.05.2021 காலை முதல் முறையான முழு ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய சரகங்களில் உரிய சாலை தடுப்புகள் அமைத்து, செக்டார்களாக வகைப்டுத்தி வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து கண்காணித்த, மிக அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் செல்ல பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் குழுவினர் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரையில் மேற்கொண்ட சோதனையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக 1497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 319 இருசக்கர வாகனங்கள், 24  ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள் மற்றும் 2 இதர வாகனங்கள் என மொத்தம் 359 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 811 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 1,037 இருசக்கர வாகனங்கள், 40 ஆட்டோக்கள் மற்றும் 17 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 1,094 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1,288 வழக்குகளும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 147 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதுபொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Translate »
error: Content is protected !!