செப்டம்பர் முதல் ரஷ்யாவின் “ஸ்பூட்னிக் வி” தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்கும்.,

ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதி நிறுவனம், சீரம் தயாரிக்கும் என்று கூறியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்ட  அறிக்கையில் கூறியது: “ஸ்பூட்னிக் வி தடுப்பூசி செப்டம்பர் முதல் புனேவில் உள்ள இந்திய சீரம் மையத்தில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 300 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. சீரம் இவற்றுடன் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. என அந்த அறிக்கையில் கூறியிருந்தது.

 

Translate »
error: Content is protected !!