செம்மரம் வெட்ட முயன்ற 10பேர் கைது

திருமலை,

திருப்பதி அலிபிரி சாலையில் உள்ள அறிவியல் மையத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திலிருந்து வனப்பகுதிக்கு ஆயுதங்களுடன் சென்ற 10 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர்கள்தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கோடாரி, ரம்பம் மற்றும் மளிகை பொருட்களை பறிமுதல் செய்தனர். 10 பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்

Translate »
error: Content is protected !!