சேலம் மாவட்டத்தில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 158 பேர் பாதிக்கப்பட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று 158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 98 பேர், ஆத்தூரில் 9 பேர், ஓமலூர், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், சங்ககிரி, அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், காடையாம்பட்டியில் 3 பேர், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், எடப்பாடி, சேலம் ஒன்றியம், வாழப்பாடி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 938 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 12 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு சுகாதாரத்துறையினர் நோய்தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!