சோத்துப்பாறை அணையின் மதகு பழுது.. மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை கடந்த் சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பாக முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்ட வந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 5 மணியலவில் பொதுப்பணித்துறையினர் அணையில் உள்ள நீர் திறக்க மதகை இயக்கி பார்த்தபொழுது மதகு பழுதாகி பாதியில் நின்றது

இதனால் அணையில் நீர்திறப்பு அதிகரித்து வினாடிக்கு 400கன அடி நீர் வீனாக வெளியேறத் துவங்கியது. தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் அணையின் மாதகு பழுது நீக்கி நீரை அடைக்க முயற்சி செய்தும் தோல்வியடைந்ததால்  அணையின் அவசரகால மதகை இயக்கி அணையிலிருந்து வீனாக வெளியேறும் நீரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அணையில் மதகு பழுதானதால் 3 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்குமேல் குறைந்துள்ளது. மேலும் தொடர்ந்து அணையில் இருந்து நீர் வீனாக வெளியேறி வரும் நிலையில் அணையின் மதகு அடைக்கப்பட்டால் நாளை காலை அணையின் நீர்மட்டம் மேலும்  குறையும் வாய்ப்பு உள்ளது. அணையிலிருந்து வெளியேறும் நீர் சேறும் சகதியுமாக வெளியேறி வருவதால் பெரியகுளம் நகராட்சி மற்றும் பெரியகுளத்தை சுற்றியுள்ள வடுகபட்டி, தென்கரை பேரூராட்சி, தாமரைக்குளம் பேரூராட்சி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Translate »
error: Content is protected !!