தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கண்காணிக்க ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அதி வேக ரோந்து படகு

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அதி வேக ரோந்து படகு:

ராமநாதபுரம்,

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ரோந்து படகு வழங்கியுள்ளது

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு குறுகிய எல்லை பகுதி என்பதால் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று விடுகின்றனர்.

இதனால்  இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்பதாக ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்வதும் மீனவர்கள் மற்றம் படகுகள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் தமிழக மீனவர்கள்;

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கை கடல் வளத்தை அளிப்பதாக இலங்கை மீனவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மீன் வளத்துறை சார்பில் இன்று ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு இஞ்சின்கள் பொருத்தப்பட்ட அதிவேக ரோந்து படகு ஒன்று வழங்கப்பட்டுள்ளது

இந்த படகின் மூலம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் நடுக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது, விசைப்படகில் அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பயன்படுத்துவது, உரிய மீன்பிடி அடையாள அட்டை இல்லாமல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது குறித்து மீன் வளத்துறை அதிகாரிகளால் ரோந்து சென்று சோதனை செய்து மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் தடைசெய்யப்பட்ட மீன் பிடிமுறையை பயன்படுத்ததும் மீனவர்கள் மீது  வழக்கு பதிவு செய்து மீன்பிடி உரிமத்தை ரத்து செய்வதுடன் மானியம் டீசல் நிறுத்தப்படும் என மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!