திமுக கிளை கழக நிர்வாகிகள் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் வெளியீடு.. திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி!

இராமநாதபுரம்,

கமுதி திமுக கிளை கழக நிர்வாகிகள் பட்டியலில் அரசு ஊழியர், மற்றும் இறந்து போனவர்களின் பெயர்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றியங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ள கிளைக் கழக நிர்வாகிகள் பட்டியலில் இறந்தவர்கள், அரசு ஊழியர்கள் பெயர் இடம் பெற்றிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றிய அளவில் ஊராட்சிகளில் கிளைக் கழக நிர்வாகிகளை பட்டியல் தயாரித்து திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான முரசொலியில் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் கமுதி தாலுகாவில் அரசு ஊழியர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயரும், குடியிருப்புகளே இல்லாத அழிந்துபோன கிராமங்களின் பெயரில் கிளை கழகங்களும் உருவாக்கப்பட்டிருப்பதால் அக்காட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுகவினர் சிலர் கூறும்போது.. திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் கடந்த 2020 மார்ச் மாதம் இறந்த பின்பு கிளை கழகத்திற்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை அடுத்து கொரோனாவுக்குப் பின் எந்த தேர்தலும் நடத்தாமல் கிளைக் கழக நிர்வாகிகளை தலைமை அறிவித்துள்ளது. இப்பட்டியலில் கமுதி தாலுகாவில் முதல்நாடு ஊராட்சியில் அரிசிக்குழுதான் கிளையில் இறந்துபோன பொ.ராமநாதன், இடையன்குளம் ஊராட்சியில் தாதாகுளம் கிளையில் இறந்துபோன பூபதி, வேப்பங்குளம் ஊராட்சியில் குண்டுகுளம் கிளை கதிர்வேல், முஷ்டக்குறிச்சி ஊராட்சியில் உடைகுளம் கிளையில் மாரிச்சாமி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல் ஊராட்சி செயலராக பணியாற்றிவரும் அரசு ஊழியரான துரைமுத்துராஜன் என்பவர் பெயரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்றனர்.

Translate »
error: Content is protected !!