திருநின்றவூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு… 2 நபர்கள் கைது… 3 பவுன் நகைகள் பறிமுதல்

சென்னை,

சென்னை, திருநின்றவூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய 2 நபர்களை கைது செய்த போலீசார்  கொள்ளையர்களிடம் இருந்து 3 பவுன் நகைகள், எல்இடி டிவி, 1 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை, திருநின்றவூர், மாருதி நகர், நத்தமேடு மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிரபு (38). கடந்த 4ம் தேதியன்று  மதியம் சுமார் 2 மணியளவில் வீட்டில் குடும்பத்துடன் உறங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் பிரபுவின் வீட்டுக்கு நுழைந்துள்ளனர். வீட்டு பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகைகள், எல்இடி டிவி, 1 ஜோடி வெள்ளிக் கொலுசு, 1 செல்போன் மற்றும் 1 கைக்கடிகாரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பியோடி விட்டனர்.

அதிகாலையில் எழுந்து பார்த்த போது வீட்டுக்குள் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பிரபு திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்பிரபுவின் வீட்டுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 2 நபர்கள்  பிரபுவின் வீட்டிற்குள் நுழைந்து திருடிச் சென்றது தெரியவந்தது. அதனையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளில் தெரிந்த

குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து திருடர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக  அஜித்குமார் (21), பட்டாபிராம் கார்த்திக் () முட்டை கார்த்திக் (20) ஆகிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 சவரன் தங்க நகைகள், சோனி எல்இடி டிவி, 1 ஜோடி வெள்ளிக் கொலுசு, 1 செல்போன் மற்றும்  1 கைக்கடிகாரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளி அஜித்குமார் மீது திருநின்றவூர்பூந்தமல்லி,

அரக்கோணம் மற்றும் ஓட்டேரி காவல் நிலையங்களிலும், கார்த்திக் மீது அரக்கோணம் காவல் நிலையத்திலும் திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் 2 குற்றவாளிகளும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!