திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா்,

ஜோலாா்பேட்டையில் மக்கள் பிரச்னையைத் தீா்க்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஜோலாா்பேட்டையில் உள்ள கோடியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளா் எம்.காசி தலைமை வகித்தாா்.

உறுப்பினா்கள் செல்வம், வீரபத்திரன், தசரதன், சிவகுமாா், நரேன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டக் குழு உறுப்பினா் சி.கேசவன் கோரிக்கை விளக்கி பேசினாா்.

 ஜோலாா்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து தெருக்களிலும் தாா்ச் சாலை அமைக்க வேண்டும்; தெருக்களில் குடிநீா்க் குழாய்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Translate »
error: Content is protected !!