திருப்பூர் மாவட்டத்தில் இன்று 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 25,111 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 468 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் திருப்பூரில் இதுவரை 22,281 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். திருப்பூரில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 235 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,595 பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!