தென்காசி தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை…!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கள்ள காதல் விவகாரத்தால் இருவர் தற்கொலை கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தனியார் விடுதியில் சிவகிரியை சேர்ந்த அந்தோணிராஜ் (45), மாலா (35) என்ற பெண்ணும் தங்கியிருந்துள்ளனர்.

இருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் கடையநல்லூரில் தனியார் விடுதியில் தங்கி உள்ள நிலையில் நீண்ட நேரம் கதவு திறக்கப்படாதால் ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் கதவை திறந்து பார்த்த போது இருவரும் ரத்தக்கரையுடன் இறந்து கிடந்துள்ளனர். . இச்சம்பவம் குறித்து போலீசார் தற்கொலையா? கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!