தேனியில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி இறங்கும் திருவிழா

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது.

பெரியகுளம் வராகநதியின் தென்கரையில்  ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் கரையில் இருந்து கரகம் எடுத்து ஊரின் முக்கிய வீதி வழியாக உலா வந்து கோவிலின் முன் அமைக்கப்பட்ட  பூக்குழியில் பக்தர்கள் இறங்கினார்கள்.

இப் பூக்குழி இறங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். மேலும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது .இதில் தேனி, தாமரைக்குளம், அல்லிநகரம், வடுகபட்டி உள்பட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  

 

Translate »
error: Content is protected !!