தேனி மாவட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் தேர்தல் பிரச்சாரம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சார கூட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்து இருந்தார் .

அவருக்கு ஆண்டிபட்டியில் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பிச்சம்பட்டி மொட்டனூத்து, மரிக்குண்டு ,கண்டமனூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது ,
ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் மகாராஜனை 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள் .

இது போதாது வருகின்ற பொதுத் தேர்தலில் தலைமை அறிவிக்கும் திமுக வேட்பாளரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். கடந்த முறை நடந்த எம்பி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது .

39 இடங்களில் 38 வெற்றி பெற்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவானது. ஆனால் தேனி பாராளுமன்ற தொகுதி மற்றும் மக்கள்தான் ஏமாற்றி விட்டீர்கள்மேலும் தமிழ்நாட்டு மக்கள் மோடி மீது கோபத்தில் உள்ளார்கள். ஏனென்றால் இந்தியாவிலேயே மோடி அலை வீசிய எல்லா மாநிலங்களும் அவருக்கு ஆதரவாக இருந்த போதே, தமிழ்நாட்டு மக்கள் மட்டும் அவருக்கு ஆதரவளிக்கவில்லை, என்பதாலேயே அந்த கோபம்.

ஜிஎஸ்டி வரி மூலம் தமிழ்நாடு மக்களுக்கு 15,000 கோடி திருப்பி தர வேண்டியுள்ளது. ஆனால் அதை தர மறுக்கிறார். மழை வெள்ள நிவாரணமாக 10,000 கோடி ரூபாய் கேட்டோம் அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் புதிதாக கட்டப்படும் பாராளுமன்ற வளாகத்தில் பத்தாயிரம் கோடியை செலவு செய்கிறார்.     

கொரானா காலத்தில் தனக்காக இரண்டு சொகுசு விமானங்கள் வாங்கியதில் 7 ஆயிரம் கோடியை செலவு செய்துள்ளார் .இது எல்லாம் உங்களுடைய வரிப்பணம். திமுக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை 400 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 700 ரூபாயாக உயர்ந்துள்ளது .

பெட்ரோல் விலை 40 ரூபாயாக இருந்தது. தற்போது 90 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் விலை 48 ரூபாயாக இருந்தது. தற்போது 220 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு இரண்டு அடிமைகள் சேர்ந்து நீட் தேர்வு தமிழ்நாட்டில் திணித்து உள்ளார்கள் .

எல்லோரும் வேண்டாம் என்று சொன்ன பிறகும், நீட் தேர்வை வலுக்கட்டாயமாக திணித்து உள்ளார்கள். இதனால் இதுவரையிலும் 14 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்,

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ம் யார் சிறந்த அடிமை என்பதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். டீக்கடை நடத்தி வந்த துணை முதல்வருக்கு இத்தனை கோடி சொத்துக்கள் எப்படி வந்தது .சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வெளியேறி வந்த உடன் ,அவர் நுழைந்து விடுவார் என்பதற்காக ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தையும் ,கட்சி அலுவலகத்துக்கும் சீல் வைத்துவிட்டார்கள்

அமைச்சர் ஒருவர் பேசும்போது மறைந்த அம்மா உயிரோடு  இருந்திருந்தால் கூட இந்த அளவுக்கு சிறந்த நினைவு மண்டபத்தை கட்டி இருக்க மாட்டார்கள் என்று கோமாளித்தனமாக பேசுகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி மோடி தான் எங்கள் டாடி என்று கூறுகிறார்.

ஆனால் ஜெயலலிதாவோ மோடியா இந்த லேடியா என்று கேட்டார் .மிகச் சிறந்த தொழில்நுட்பம் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று மூன்று வருட காலமாக இதுவரை எதுவும் தெரியவில்லை .85 நாட்களாக சிசிடிவி கேமரா செயல்படவில்லை என்று கூறுகிறார்கள்.

ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது என்று முதலில் கூறியவரே ஓபிஎஸ் தான். அப்படி இருக்கும்போது விசாரணை கமிஷன் 10 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறை கூட அதற்கு சென்று ஓபிஎஸ் பதிலளிக்கவில்லை. வரஇருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

அவ்வாறு வெற்றி பெறும் பட்சத்தில் ஆண்டிபட்டி பகுதியில் முல்லை பெரியாறு அணையிலிருந்து ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கான தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்றுவோம், T.சுப்புலாபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டத்தை செயல்படுத்துவோம். ஆண்டிபட்டி பகுதிக்கு புறவழிச் சாலை திட்டத்தை கொண்டு வருவோம்.

தலைவர் ஸ்டாலின் கூறியது போல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களுக்குள் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் தீர்த்து வைப்போம் ,என்று பேசினார். இறுதியாக அவர் பேசும் போது இன்னும் இரண்டு அம்மாவாசை தான் இருக்கு அந்த இரு அம்மாவாசைகளை துரத்த மக்கள் ஒன்று சேர்ந்து திமுகவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மக்களிடம் உறுதி மொழி கேட்டுக் கொண்டார்

 

Translate »
error: Content is protected !!