நடிகர் ரஜினி கட்சி தொடங்கப்படும் என தெரிவித்த பின் – ரசிகர்கள் கொட்டும் மழையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நடிகர் ரஜினி ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என தெரிவித்த நிலையில் திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் கொட்டும் மழையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா? இல்லையா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்து வந்த நிலையில் இன்று ட்விட்டர் பக்கத்தில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி அறிவிப்பு குறித்து ஜனவரி மாதம் தேதியை வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் ரஜினியின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது என்ற நிலையில் திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு கொட்டும் மழையில் பட்டாசு வைத்து உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மேலும் அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி ரஜினியின் புகைப்படத்தை வைத்து ரஜினி முதல்வர் வாழ்க என்ற கோசத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Translate »
error: Content is protected !!