நாடு முழுவதும் தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி கொரோனா தொற்று 3 லட்சத்தைக் தாண்டியது

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,49,691 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக தினசரி கொரோனா தொற்று 3 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவாக இன்று 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 113 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172 பேர் ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்து 110- ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரமாக உள்ளது.

Translate »
error: Content is protected !!