நீட் தேர்வு ரத்து கோரி நாம்தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்….

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர். போராட்டத்திற்கு பின்னர் உரையாற்றிய கட்சியின் தலைவர் சீமான் , தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அச்சமடைந்து தற்கொலை செய்து கொண்ட 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டார். மேலும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யா விட்டால் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!