புதிய கல்வியாண்டு தொடங்குகிறது: கேரளாவில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

நோய் பரவல் அதிகம் இருந்தபோதும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில் கேரளாவில் 2021 – 22ம் கல்வியாண்டு நாளைமுதல் தொடங்குகிறது.

இதையடுத்து 1 முதல் 12 வரையிலான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.

புதிய கல்வியாண்டை கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று காலை 8.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள காட்டன் ஹில் அரசு மகளிர் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

Translate »
error: Content is protected !!