புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியது?

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,  7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற மசோதா கடந்த 13ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இது ஏற்புடையது என்றாலும், முழுமையானதல்லகுடும்பன், காலடி, பன்னாடி உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பெயர்களுக்கு எந்தவித குறையும் இல்லைஅதே வேளையில் இச்சமுதாயத்தினரை பட்டியல் பிரிவில் வைத்திருப்பதால் அவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டது, வளர்ச்சி தடைபட்டது, பொதுமக்களுடன் கலந்துகொள்ளும் வாய்ப்பு தடைபட்டதால் சண்டைகளும், சச்சரவுகளும் ஏற்பட்டு சமூக நல்லிணக்கம் கெட்டுவிட்டது.

தமிழராக, இந்தியராக அடையாளப் படுத்த முடியாமல் ஒரு தீண்டாமைச் சுவராகவே பட்டியல் பிரிவில் இன்று வரை இருந்து வருகிறதுஅதனால் தான் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டு தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாகும்.

எனவே வருகிற மார்ச் ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் வேளையில், பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்ட புதிய ஷரத்தையும் இணைத்து திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கை ஆகும்

மேலும் தேனி மக்களவை உறுப்பினர் இரவீந்திரநாத்தும் எங்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்று கூறினார். பட்டியல் பிரிவில் இருந்து நாங்கள் வெளியேறுவதால் பிற சமுதாயத்தினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லைஅவர்களது சலுகைகளை நாங்கள் பறித்துக் கொள்ளப்போவதில்லை.

பரந்து விரிந்த தமிழ் சமுதாயத்தில் ஒன்றிணைவதற்கும், சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இந்தப் பட்டியல் வெளியேற்றம் உறுதுணையாக இருக்கும். தமிழக முதல்வரும் இந்த திருத்த மசோதா நிறைவேறுவதற்கு உதவ வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்சம உரிமைசம வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.

பின்தங்கி இருப்பவர்களை, கல்வியில் முன்னுரிமை அளித்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, பிரித்து வைத்து சமுதாயத்தை துண்டாட கூடாது. அனைவருக்கும் கிடைக்கும் சலுகைகள் கிடைத்தால் போதும், எங்களுக்கு என்று எந்தவித சிறப்பு சலுகைகளும் தேவையில்லை.

சிறப்பு சலுகை என்ற பெயரில் இந்த சமுதாயத்தை ஒதுக்கக் கூடிய, ஒடுக்கக் கூடிய செயலை மட்டும் நீக்கிக் கொள்ளுங்கள் என்றார்.   இந்துக்கள் எல்லாம் பிரிந்து இருப்பதால் தான் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது என்று சொல்லும்போதுஇச்சமுதாயம் ஒன்றிணைவதை ஆரத்தழுவி வரவேற்பதற்கு பதிலாக ஒரு சிலர் அரசியல் தூண்டுதலால் தவறான பிரச்சாரம் செய்கிறார்கள்இது அந்த சமுதாயத்தின் குரலாக இருக்காது என்றார்.ஒருவரை உயர்த்தி, மற்றவரை தாழ்த்துவது சமூகநீதி கிடையாது.

இட ஒதுக்கீடு மட்டுமே சமூக நீதி ஆகாது. திராவிட கட்சிகளின் கருத்தில், சிந்தனையில் மிகப்பெரிய பிழை இருக்கிறதுஅதை அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். பெரியாரை உதாரணம் சொன்னால் மட்டும் போதாது. அவரை புரிந்து கொள்ள வேண்டும்அவர் சொன்ன காலகட்டம் என்பது 100 ஆண்டுகளுக்கு முன்பானது. இன்று பெரியார் இருந்திருந்தால் நான் சொன்ன கருத்தை தான் அவர் கூறியிருப்பார்.

திராவிடர்களைஆதிதிராவிடகளாக  பிரித்தது தவறாகும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் செய்த பிழையால் தான் தமிழ் சமுதாயம் இன்று தமிழனாக அடையாளப் படுத்த முடியாமல் சாதி ரீதியாக பிரிந்து கிடக்கிறோம். எளிதாக ஓட்டு கிடைத்துவிடுவதால் பழைய புராணத்தை பாடி வருகிறார்கள். புதிய சிந்தனை ஏதும் கிடையாது.

எனவே திராவிடத்திற்கு மாற்று சிந்தனை வந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் என்றார். அதற்காக பாஜகவை கையில் எடுக்கவில்லைஎங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி இருப்பதால்தான் பாஜகவிற்கு நன்றி தெரிவித்து உள்ளதாக தெரிவித்தார். இனம், சாதி, மொழிக்கு அப்பாற்பட்டு அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். எல்லோருக்கும் சம வாய்ப்பும், சம பங்கு கிடைத்திட வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் இலட்சியமாகும் எனக் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!