புதுச்சேரியில் பள்ளி & கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ஆலோசனை நடத்தினர்.  பின்னர் அவர் கூறியது,

புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் சூழல் வரும்போது மீண்டும் திறக்கப்படும். புதுச்சேரியில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளின் பேரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!