பெரியகுளத்தில் பலத்த காற்று.. 50000 வாழை மரங்கள் சாய்வு… 2 கோடி ரூபாய் நஷ்டம்.. அரசு நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை

பெரியகுளம் பகுதியில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 50000த்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ததில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சேதம். அரசு நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சொக்கதேவன்பட்டிசக்கரைபட்டி, சாவடிபட்டி, வடபுதுப்பட்டி, கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை விவசாயம் செய்திருந்தனர் . இந்நிலையில் நேற்று மாலையில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் 2 கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேலான சுமார் 50ஆயிரம் வாழை மரங்கள் முற்றிலும் ஒடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில் வங்கிகளில் கடன் வாங்கி நகைகளை அடகு வைத்து பயிரிட்ட வாழை பிஞ்சு பருவம் மற்றும் பூவாக உள்ள நிலையில் சூறாவளி காற்றினால் முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதால் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலையை உரிய கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று  கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!