பெரியகுளம் பகுதியில் 100 சதவீதம் ஊரடங்கை அனுசரித்து வரும் பொதுமக்கள்..!

கொரோனா இரண்டாம் அலை பரவலால் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு..  பெரியகுளம் பகுதியில் 100 சதவீதம் ஊரடங்கை அனுசரித்து வரும் பொதுமக்கள்.

இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி பல்வேறு மாநிலங்களில் பலி எண்ணிகை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நேற்று புதிய உச்சமாக 15ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கொரோனாவின் தீவிர பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தியதால் பொதுமக்கள் அவரவர் வீடுகளில் தனிமையில் இருந்து கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று பெரியகுளம் மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் அத்தியாவசியமான மருந்துக்கடைகள், அம்மா உணவகம் உள்ளிட்டவைகளை தவிர்த்து அனைத்து கடைகளையும் அடைத்து மக்கள் வீடுகளில் இருந்து வருகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் பொது இடங்களில் உள்ளவர்களை காவல்துறையினர் வீடுகளுக்கு சென்று இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!