பொதுமக்கள் இணையதளம் மூலம் ஏமாற வேண்டாம் – சென்னை காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்துகளை ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவோ, சமூக வலைதள தகவல்களின் மூலமாகவோ போலி தகவல்களின் பேரில் வாங்க முயற்சிக்கவோ இணையதளம் மூலம் முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

ரெம்டெசிவர் மருந்துகள் கொரோனா நோய்த்தொற்று நோயாளிகளின் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானதால் மருந்து தேவை அதிகமாகி

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதன் பேரில் கட்டுபாடுகள் நிறைந்த மேற்கண்ட ரெம்டெசிவர் மருந்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மூலம் முதலில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலும், பின்னர் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திலும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நோயாளிகள் சிகிச்சை பெறுகின்ற தனியார் மருத்துவமனைகளில் வழங்கிட 18.05.2021 முதல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இருப்பினும் மருந்துகள் பெறுவதற்கு மருத்துவமனைகளை தவிர்த்து ஆன்லைன் மூலம் முயற்சி செய்து போலியான வலைதள விவரங்களை பெற்று முன்பணம் செலுத்தி ஏமாறுவதும், போலியான நபர்களின் சமூக வலைதளங்களில் தகவல்களின் பேரில் அடிப்படை விலையை விட அதிக விலைக்கு போலி ஆவணங்கள் மூலம் பெற்று விற்பனை செய்தும் சிலர் செயல்பட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் (தெற்கு & வடக்கு) மற்றும் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் தனிப்படை அமைத்து மேற்கண்ட வழிகளில் ஏமாற்றுபவர்களின் விவரங்களையும், தகவல்களையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் இதுவரை சென்னை பெருநகரில் தாம்பரம், ஐசிஎப், பல்லாவரம், வேப்பேரி, பள்ளிக்கரணை, கிண்டி, ரெட்ஹில்ஸ், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் தலைமை செயலக காலனி காவல் நிலைய சரகங்களில் காவல் துறையினரின் நடவடிக்கையின் மூலம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரெம்டெசிவர் மருந்தை போலியான ஆவணங்கள் கொடுத்து வாங்கி பதுக்கி வைத்தும், அதிக விலைக்கு விற்பனை செய்த 34 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 123 ரெம்டெசிவர் மருந்துகள், 6 பங்களாதேஷ் ரெம்டெசிவர் மருந்துகள் மற்றும் 140  நினவீர் மருந்துகள் உட்பட 269 மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில்மயிலாப்பூர் துணை ஆணையாளர் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மற்றும் E-1 மயிலாப்பூர் காவல்

நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்த 14.05.2021 அன்று மதுரவாயல் நாகாத்தம்மன் தெருவில் இயங்கி வரும் Medistar Health Care Ltd என்ற மருந்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் புவனேஷ்வர் /36 என்பவரை விசாரணை செய்ததில் அவர் நினவீர் (Remdesivir) எனும் மருந்தை கொண்டிதோப்பு, ஆயலூர் முத்தையா தெருவில் இயங்கி வரும் Navkar Distributors என்ற மருந்து விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் நிஷித் பண்டாரி, /32 என்பவரிடம் இருந்து Remdesivir மருந்தை எந்த விதமான ஆவணமும் இன்றி தான்வாங்கி வந்து அரசாங்க அனுமதியின்றி விற்பனை செய்வதாக தெரிவித்ததன் பேரில், காவல் குழுவினர் கொண்டிதோப்புசென்று Navkar Distributors நிறுவனத்தை சோதனை செய்து, 145 ரெம்டெசிவர் மற்றும் நினவீர் மருந்து குப்பிகள் பறிமுதல் செய்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர் மீதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்பேரில், கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்த குற்றவாளிகள் புவனேஷ்வர் மற்றும் நிஷித் பண்டாரி ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய E-1 மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், .கா., அவர்கள் நேற்று (21.5.2021) உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 2 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் Remdesiver, Tocilizuma-b, Amphotericin மருந்துகள் மற்றும் Oxygen Concentrator இயந்திரங்களை தருவதாக இணையதளத்தில் வரும் அழைப்புகள் மற்றும் விளம்பரத்தை கண்டு V-6 கொளத்தூர் நிலைய எல்லையில் ஜெயச்சந்திரன் என்பவர் ரூ.40,800/- பணமும், S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் ஶ்ரீகணேஷ் என்பவர் ரூ.1,23,000/- மற்றும் ரேகா என்பவர் ரூ.73,000/- செலுத்தியும்,  H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லையில் ஒரு மருத்துவர் ரூ.1,67,000/- மற்றும் மற்றொரு மருத்துவர் ரூ.14,000/- ஆகியவற்றை இணையதளத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்ததாக, புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இணையதளத்தில் ரெம்டெசிவர் மருந்துகள் விற்பதாக கூறி அதிக விலைக்கு விற்ற 1.ஆதித்யன், /24, கே.கே.நகர்2.ராஜ்குமார், /27, பட்டாளம், 3.சையது ரஞ்சித், /38, சாஸ்திரிநகர் ஆகியோரை J-2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 15.5.2021 அன்று கைது செய்துரெம்டெசிவர் 2 குப்பிகள் மற்றும் பணம் ரூ.89,000/-  பறிமுதல் செய்து, குற்றவாளிகள் மூவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைகளில் உரிய மருத்துவர் பரிந்துரை தகவல்படி தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ரெம்டெசிவர் மருந்துகளை வழங்கி வருவதாலும், இணையதள வர்த்தகம் மூலம் தனிநபர்கள் பெறுவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதாலும், யாரும் இணையதள விளம்பரங்கள், ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் ரெம்டெசிவர் மருந்துகள் வாங்குவதற்கு போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தக செயல்முறைகளில் உண்மைத்தன்மை அறிந்து விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நம்பகத்தன்மை கொண்ட இணைய வலைதளங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருந்து நிறுவனம் மற்றும் விற்பனையாளர்களிடம் மட்டுமே மருந்துகள் வாங்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் சென்னை  பெருநகரில் 12 காவல் மாவட்டங்களில் இயங்கி வரும் சைபர் குற்றப்பிரிவில் 24 மணி நேரத்திற்குள் புகார் தெரிவித்தால் இழந்த பணத்தை மீள பெற வாய்ப்புள்ளது. எனவே புகார்தாரர்கள் பணம் இழந்தவுடனே சம்மந்தப்பட்ட காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Translate »
error: Content is protected !!