போதைக்காக லெமன் ஜுசுடன் தின்னர் கலந்து குடித்தவர் பலி

போதைக்காக லெமன் சாறில் தின்னலர் கலந்து குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம், குன்னவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். பெயிண்டராக வேலை பார்க்கிறார். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் கெமிக்கல்லுடன் எலுமிச்சை பழம் சாறை பிழிந்து கலந்து குடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்றும் தனது நண்பர்கள் சிவசங்கரன், சுரேஷ், கிருஷ்ணன் ஆகியோருடன் கூட்டாக அமர்ந்து எலுமிச்சை பழச்சாறு பிழிந்து தின்னரைக் குடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டு துடித்தார்.

அவரை அங்குள்ளவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார். கிருஷ்ணன், சிவசங்கர் இருவரும் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுரேஷ் என்பவர் தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!