போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு… 3 குண்டர்கள் கைது

சென்னை,

சென்னை, திருநின்றவூரில் ஒரு கோடி மதிப்புள்ள காலி இடத்தினை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்தவர் நடேசன். தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான 2,400 சதுரஅடி

நிலம் திருநின்றவூர், லட்சுமி பிரகாஷ் நகரில் உள்ளது. நடேசன் சென்னை வரும்போதெல்லாம் தனக்குரிய இடத்தினை பார்த்து. செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு நடேசனின் மனைக்கு பக்கத்து மனையில் சிலர் சுத்தம் செய்து

கொண்டிருப்பதாக அங்கிருந்த நபர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது இடம் குறித்து. வில்லங்கம் போட்டு பார்த்தபோது அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகின. அவரது இடத்தை கடந்த 2016-ம் ஆண்டு

நயப்பாக்கத்தை சேர்ந்த துரை என்பவர் தனது மகன் ஏசுதாஸ் என்பவருக்கு ஆவண ஆவடி சார்பதிவாளர் அலுவலகம் மூலம், பாகப்பிரிவினை பத்திரம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். பின்னர் ஏசுதாஸ் அந்த இடத்தை கடந்த 31.01.2017 அன்று ஆவடி

சார்பதிவாளர் அலுவலகத்தில் கனகராஜ் என்பவருக்கு பொது அதிகார ஆவணத்தை போலியாக ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தெரியவந்தது. நடேசனின் நிலத்தை மர்ம நபர்கள் போலி ஆவணம் மூலம் அபகரித்தது தெரியவந்தது. இது தொடர்பாக

நடேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் 2,400 சதுர அடி காலி மனையை துரை என்பவர் மூலம் மோசடி செய்தது உண்மை என தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் இந்த மோசடியில் தொடர்புடைய பட்டாபிராமைச் சேர்ந்த ஏசுதாஸ் (வயது 47),  ஜோசப் (52), சாமுவேல் (47), ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் 3 குற்றவாளிகளும் பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

Translate »
error: Content is protected !!