போலீசிடமிருந்து திருடிய வாகனத்தை லாரியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய நபரிடம் போலீசார் விசாரணை

திருப்பூர்,

போலீசிடமிருந்து திருடிய வாகனத்தை லாரியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி விட்டு விசாரணைக்குச் சென்றதாகத் தெரிகிறது.

அப்போது அந்த போலீஸ் வாகனத்தை மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் காவலர்களுக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு ஊத்துக்குளி சாலையில் சென்றுள்ளார். கூலிபாளையம் அருகே நிலை தடுமாறி எதிரே வந்த லாரியில் போலீஸ் வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார். லேசான காயம் அடைந்த அவருக்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போலீஸ் வாகனத்தை எடுத்துச் சென்று விபத்துக்குள்ளாக்கிய நபரிடம் விசாரணை செய்தனர். அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (23) என்பது தெரியவந்தது. அவரிடம் மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.

Translate »
error: Content is protected !!