மரணித்த இந்து சகோதரரின் உடலை அடக்கம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்

திருநெல்வேலி சேர்ந்த சகோதரர் சென்னை சிட்டி சென்டரில் பணி புரிந்து வந்தார் அவர் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு திடிரென மரணம் அடைந்தார்.

மருத்துவ மனையில் இருந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் இடத்தில் மரணித்த இந்து சகோதரரின் உடலை அவர்கள் முறை படி அடக்கம் செய்ய உதவி கேட்க பட்டது. இதனை அடுத்து மாவட்ட தலைவர் இஸ்மாயில், மாவட்ட செயலாளர் அன்சாரி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அக்பர், மாணவர் முன்னணி அக்தர் உசேன், மற்றும் சகோதரர் முபின் ஆகியோர் மூல கொளத்தூர் சுடுகாட்டில் உடலை எடுத்து சென்றனர், அங்கு அவருக்கு இந்து முறை படி அவரை அடக்கம் செய்ய பட்டார்இந்த மனித நேய பணியை செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை மருத்துவ மனை நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!