முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா!

கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

க்மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ஏ.கே. அந்தோனி; கேரள மாநிலத்தை சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவரும் ஆவார்.

இந்த நிலையில், ஏ.கே. அந்தோனி மற்றும் அவரது மனைவி எலிசபெத் அந்தோனி ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த தகவலை, மகன் அனில் கே அந்தோனி, டுவிட்டர் பதிவில் கூறியிருக்கிறார். தந்தை ஏ.கே. அந்தோனி மற்றும் தாய் எலிசபெத் அந்தோனி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல் நிலை சீராக உள்ளதாக, அவர் கூறியிருக்கிறார்.

Translate »
error: Content is protected !!