முழு பலாபழத்துடன் வந்த வேட்பாளர்… பரபரப்பான அதிகாரிகள்..!

ஒரு முழு பலாப்பழத்தை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது..

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் அண்ணா புரட்சித்தலைவர் அம்மா முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் கூட்டணி கட்சியான இந்து ஜனநாயக பேரவையின் நிறுவன தலைவர் வேட்பாளர் V. அண்ணாத்துறை தனது சின்னமான பலாப்பழத்துடன்,

இராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் செந்தில்வேல்முருகனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர் அண்ணாத்துறை கையில் பலாப்பழத்துடன் வந்தது.. அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…

Translate »
error: Content is protected !!