ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் ….. முதன்முறை வாக்களிக்கும் இளம் வர்ககாளர்கள் உறுதிமொழி ஏற்பு

முதன்முறை வாக்களிக்கும் இளம் வர்ககாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு;

ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று (10.03.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தலைமையில், முதன்முறை வாக்காளர்களான கல்லூரி மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தமிழ்நாடு நட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு 06.04.2021 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, தேர்தல் பணிகளில் பொது மக்களின் பங்களிப்பை ஊக்குவித்து 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கை எய்திடும் நோக்கில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், 18 வயது பூர்த்தியான முதன்முறை வாக்காளர்களான கல்லூரி மாணவியர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் இன்றைய தினம் வாக்காளர் விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தலைமையில், கல்லூரி மாணவியர்கள்மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான

தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும்மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம்;” என உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கார்த்திக் IPS கலந்து கொண்டார்.

Translate »
error: Content is protected !!