விவசாயிகளுக்கு ஆதரவாக டிச. 5ல் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. , சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி மு.க. ஸ்டாலின் இதில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, வரும் வரும் 5ம் தேதி சனிக்கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முக ஸ்டாலின் தலைமை ஏற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!