விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை… ! ஆனைமலையாறு – நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற கோரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

திருப்பூரில் பிஏபி பாசனத் திட்டம் விவசாயிகள் சார்பில் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா பொங்கலூர் ஒன்றியம் பகுதியில் பிஏபி பாசனத் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை துவங்கி மாலை வரை நடைபெற்று வருகிறது.

இந்த கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆணைமலையாறு நல்லாறு திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், பாசன அமைப்புகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும், காண்டூர் கால்வாயில் பிரதான கால்வாய், கிளை கால்வாய் பகுதிகளில் சிதிலமடைந்த பகுதிகளை சீரமைத்து தர வேண்டும், பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்திற்கு தொழில்நுட்ப குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டமானது நடைபெறுகிறது.

பி..பி பாசன கால்வாயின் மூலம் , ஒரு மண்டலத்திற்கு மட்டும் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் நிலையில், மேற்கூறிய திட்டங்களை நிறைவேற்றும் பட்சத்தில் சுமார் 25 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!