வீட்டில் இருக்கும் போது மாஸ்க் அணிய வேண்டும் – மராட்டிய துணை முதல்வர்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 269 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விவகாரத்தை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த விரும்பவில்லை. மக்கள் வீட்டில் இருக்கும் போது மாஸ்க் அணிய வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Translate »
error: Content is protected !!